ஒரு ரோஜா மலர் தன்னுடைய மென்மையான அழகாலும் அதிலிருந்து வீசும் நறுமணத்தாலும் நம்மை அதனிடம் ஈர்க்கிறது . ஆனால் நாம் ரோஜா மலரின் அருகில் செல்லும் போது அதில் உள்ள முட்களிடம் கவனமாக இருக்க வேண்டும் .முட்கள் இல்லாத ரோஜா செடியே கிடையாது அல்லவா !
நம்முடைய உடலை முட்கள் நிரம்பிய ரோஜா செடிக்கு ஒப்பிட்டுச் சொல்லலாம் இதில் காமம் ,குரோதம் ,மோஹம் ,பொறாமை ,பேராசை ,கர்வம் ,நான் எனது என்கிற அஹம்காரம் ஆகிய கூரிய முட்கள் வளர்ந்து நம்மை நெருங்குபவர்களைக் குத்திக் கிழிக்கின்றன .
ஆயிரம் இதழ்கள் உடைய தாமரை மலரை கொண்டிருக்கும் நம்முடைய சஹஸ்ராரம் எனும் உச்சந்தலை ஒரு ரோஜாவைப் போன்றது. .நாம் எப்பொழுது இறைவனிடத்தில் அத்யந்த பக்தியும் அன்பும்
செலுத்துகிறோமோ அப்பொழுது இந்த சஹஸ்ராரம் மலர்ந்து நறுமணம் பரப்பி மிகுந்த பொலிவுடன் தோற்றமளிக்கும் .
அதனால் ஒரு மனிதன் அற்புதமான பயனை அடைகிறான் .அவனுள்ளிருக்கும் இறை பக்தியானது மேலே குறிப்பிட்ட முட்கள் அனைத்தையம் மழுங்கச் செய்து விடுவதால் ,அவனிடம் வருவதற்கு யாரும் தயங்க மாட்டார்கள் . மாறாக மகிழ்ச்சியே அடைவார்கள் .
ரோஜா மலர் மலரும்பொழுது எப்படி அழகுடனும் நறுமணத்துடனும் காட்சியளிக்கிறதோ அதே போல் நம்முள் இறைவன் பால் பக்தி மலரும் பொழுது அந்த பக்தியின் காந்தியும் நல் வாசனையும் ,இறைவனின் அருளும் நம்மை அந்தப் பரம் பொருளின் வசம் ஈர்க்கின்றன . அப்பொழுது நாம் நம்முள் இருக்கும் முட்களாகிய எதிர்மறை எண்ணங்கயும் ,குணங்களையும் இறைவனின் அன்பையும் அருளையும் தேடும் பாதையில் செலுத்தி ஆனந்தமாக வாழ முடியும்.
ஒருவருடைய வாழ்க்கையில் இப்படி நறுமணம் வீச விரும்பினால் இதோ ஒரு சுலபான வழி உள்ளது . இடைவிடாது ,முறையாக "ராம நாம" ஜபம் செய்யுங்கள் .உங்களிடமிருந்து வீசும் தூய பக்தியின் நறுமணத்தால் இறைவன் உங்கள் வசமாவான் .
சீதாராம் !
With thanks for translation to Mrs Meena Ram
With thanks for translation to Mrs Meena Ram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக